Thursday, September 03, 2009

இன்றிரவு நான் எழுதுவேன்


இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை

எழுதுவேன், உதாரணத்திற்கு, `இந்த இரவு நட்சத்திரங்களால் ஜொலிக்கிறது
அந் நட்சத்திரங்கள் நீல நிறத்தில் நடுங்குகின்ற்ன தொலை தூரத்தில்.’

இரவின் காற்று வானத்தில் சுழன்று இசைக்கிறது.

இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை
நான் அவளைக் காதலித்தேன், சில நேரங்களில் அவளும் என்னைக் காதலித்தாள்

இதைப் போன்ற இரவு நேரத்தில் ஒரு நாள் என் கைகளில் ஏந்தியிருந்தேன்
அவளை முத்தமிட்டேன் மீண்டும் மீண்டும் எல்லையற்ற வானத்தின் கீழ். 

அவள் என்னைக் காதலித்தாள், சில நேரங்களில் நானும் அவளைக் காதலித்தேன்
எவ்வாறு ஒருவன் காதல் வயப்படாமல் இருக்க முடியும் அவளின் பெரிய, சலனமற்ற விழிகளால். 

இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை
அவள் என்னுடன் இல்லை என்றெண்ணும் பொழுது, அவளை இழந்துவிட்டேன் என்றுணரும் பொழுது.

அவள் இல்லாமல் விரிந்திருக்கும் இவ்விரவைக் கேட்கும் பொழுது
கவிதை விழுகிறது ஆன்மாவில் பச்சையை நோக்கிப் பாயும் பனித் துளிபோல்

எது முக்கியம் ஏன் என் காதல் அவளைக் கட்டிப்போடவில்லை
வானம் வின்மீண்களால் ஜொலிக்கிறது ஆனால் அவள் என்னுடன் இல்லை.

இதுவே முழுமை. தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் வெகு தூரத்தில்
என் ஆன்மாவில் திருப்தி இல்லை அவளை இழந்து 

என் விழிகள் தேடுகின்றன அவளை அருகில் அழைத்து வந்துவிடுவதுபோல்
என் இதயம் தேடுகிறது அவளை ஆனால் அவள் என்னுடன் இல்லை. 

அதே இரவு வெண்ணிறமாக்குகிறது அதே மரங்களை
நாங்கள், அன்றிருந்தது போல் இன்று இல்லை

இன்னும் நான் அவளை நேசிக்கவில்லை, இது உண்மை, ஆனால் நான் அவளை எவ்வளவு காதலித்தேன்
என் குரல் காற்றைப் பிடிக்க முயன்றது அவள் செவிகளைத் தொட 

வேறு ஒருவனுடையவள். அவள் வேறு ஒருவனுடைய்வளாவாள். என் முத்தங்களுக்கு முந்தியிருந்த அவள் 
அவள் குரல், அவளின் வெண் தேகம். அவளின் முடிவற்ற கண்கள்.

இன்னும் நான் அவளை நேசிக்கவில்லை, இது உண்மை, ஆனால் ஒருக்கால் நான் அவளைக் காதலிக்கலாம்
காதல் மிகச் சிறிது, மறப்பது மிகப் பெரிது

இதைப் போன்ற இரவு நேரத்தில் அவளை என் கைகளில் ஏந்தியிருந்ததால்
என் ஆன்மாவில் திருப்தி இல்லை அவளை இழந்து

இதுவே அவளால் துன்புற்று அனுபவிக்கும் இறுதி வலி
இவையே நான் அவளுக்கு எழுதும் இறுதி வரிகள்.








1 comment:

Matangi Mawley said...

WOW!! nice words... I cant read tamil.. I asked my friend to read it to me.. it's really good!

Stories From The Soul Town

There lies a magical land. Surrounded by the green ghats to the west, gurgling great rivers on the east, the valley with the very blue sky. A temple town of the tamils. Sitting on the dancing rock on the highland overlooking the valley, the writer procreates the lives of the people of this lesser known south west. Full of strange yet simple souls.