Tuesday, July 27, 2010

அடங்கா மனம்...

வறுமையில் உழலும், இருக்கும் இடம் தெரியாத இன்னொரு இலக்கியவாதி தோழர் தேனி செ. சு. வாசி எழுதிய கவிதைகளில் சில.

"அடங்கா மனம்" தொகுப்பிலிருந்து...


***

உண்மை தெரியுமா?
------------------

தினம் தினம் காலை
யோகா பயிற்சி
மனம் விரும்புதே
அமைதி புரட்சி
அயல் அடிமை வாழ்வில்
மலர்ந்த மகிழ்ச்சி
ஆடிப் பாடினோம்
ஆனந்த மகிழ்ச்சி
கொடிய கையூட்டு
கொடி போல் படர்ந்து
கோடானு கோடி மக்களை
கொடுமை படுத்துதே
சட்டமியற்றி சாதனை
படைத்த மனிதா
பிரிந்த சாதி மத
சாக்கடையில் தவழ்வது
சரியா...
கல்வி பல பயின்றாலும்
ஒழுக்க அற நெறியில்
மிருக சாண மனம் வீசுதே
பொய் மனிதா பொய் மனிதா
உண்மை உனக்கு தெரியுமா
பேசிப் பார்...
பிரபஞ்சம் தலைவணங்கும்

***

கானல் நிலம்
------------

காணி நிலத்தில்
களைஎடுத்து
சேற்றில் உழுதுளப்பி
வீரியம் நிறைந்த
விதை விதைத்து
பயிராக பாடுபட்டு
வெயிலில் வெந்து
வந்துள்ளோம்....
எனக்கும் அவனுக்கும்
இடைத்தரகன் - நீ
எள்ளளளவு போதுமென்று
நெல்அளவை தேடுகின்றாய்
மடை கட்டி
மருகா வெட்டி
பகல் இரவெல்லாம்
நீர் பாய்ச்சி
நெஞ்சுரம்
நிறைந்ததைய்யா
....
இது தானா விலை?

***

வளர்ச்சி
--------

நட்புறவும்
விடுமுறை நாட்களும்
அறியப்பட்ட
நாம்... காதல்
சொந்த பந்தங்கள்
பகை மறந்து
ஒன்று சேர்ந்து
வாழ்ந்து இருப்பது
எப்போது?

***

யதார்த்தம்
---------

உழைப்பே மூலதனமென
புரிந்தவர்கள்
மாய்மாலம் பேசி
இலவசமாகப் பெற்ற
உழைப்பில் உயர்ந்த
முதலாளியை பார்த்து
ஏக்கத்தோடு....
அவர் உயர்வுக்கு
நான் தான் காரணம்
என்கிறார்கள்
தொழிலாளர்கள்

***

தேச துரோகிகள்
--------------

வேட்பாளர்கள் வீதி வீதியாக
கையோசை எழுப்பும்
கூட்டங்களுடன் - வாக்கு
சேகரிக்கும் அன்றே
வெற்றியின் யுக்திகளை
வழிவகை செய்கிறார்கள்
விலை நிர்ணயிக்க முடியாத
சொத்துக்களை, குடும்ப
அட்டை அடகும் வைக்கும்
வழக்கத்தில் உள்ளவர்கள்
மக்களின் பிரதிநிதிகளாக
வெற்றியடைய முயற்சிப்போரிடம்
மறைமுக கையூட்டு
கரன்சிகளை பெற்று
தங்கள் வாழ்விட சொத்துக்களை;
அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்கு
கேள்வியுரிமைகளையும்
வசதிவாய்ப்புகளையும்
அன்றாட தின கூலி தொகைக்காக
அன்பளிப்பும் பெற்று
வாக்களித்த மக்கள்;
அதுசரியில்லை இதுசரியில்லைஎன
குறை கூறுகிறார்கள்.
தேசிய சட்டத்தின்
முதல் குற்றவாளிகள்
மக்களே....

Stories From The Soul Town

There lies a magical land. Surrounded by the green ghats to the west, gurgling great rivers on the east, the valley with the very blue sky. A temple town of the tamils. Sitting on the dancing rock on the highland overlooking the valley, the writer procreates the lives of the people of this lesser known south west. Full of strange yet simple souls.